முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க
சற்று முன் அதிரடியாக கைது
பாதுகாவலர்கள்
நடத்திய துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் பலியானது
தொடர்பாக முன்னாள் அமைச்சர்
அர்ஜூன ரணதுங்கவை பொலிஸார் இன்று கைது செய்தனர்.
முன்னாள் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவின் தீவிர ஆதரவாளரும்,
இலங்கை பெட்ரோலிய வனத்துறை முன்னாள் அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க நேற்று மாலை தனது
அலுவலகத்துக்கு பாதுகாவலர்களுடன் சென்றார். அங்கு சில கோப்புகளை
எடுத்துச் செல்ல முயன்றார். ஆனால்
அங்கிருந்த சில ஊழியர்கள் அர்ஜூன ரணதுங்கவை
சிறைப்பிடிக்க முயற்சித்தாக கூறப்படுகிறது.
அப்போது
இரு தரப்பினருக்கு இடையில் கடுமையான வாக்குவாதம்
ஏற்பட்டது. இதில் ஆவேசம் அடைந்த
அமைச்சரின் பாதுகாவலர்கள்
ஊழியர்களை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக
சுட்டனர். இதில் படுகாயமடைந்த ஊழியர்
ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் 2 பேர் காயமடைந்து சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்,
பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில்
ஊழியர் ஒருவர் பலியானது தொடர்பாக
முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவை
பொலிஸார் இன்று கைது செய்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.