பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு
சீருடைக்கான பண வவுச்சர்கள்
எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பம்



பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த ஆண்டு சீருடைக்கான பண வுச்சர்களை விநியோகிக்கும் பணி எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இம்முறை இதன் பெறுமதி அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரன தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்களின் சீருடைக்கு தேவையான துணியின் பெறுமதியை கவனத்தில் கொண்டு அதற்கான விலையை தீர்மானிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அனைத்து மாவட்ட செயலாளர் பிரிவு மட்டத்தில் விலைகளை பெற்று இறுதி விலையை தீர்மானித்திருப்பதாகவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணை நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து மாணவர்களுக்கும் இந்த வெவுச்சர்கள் வழங்கப்படவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரன தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top