சாய்ந்தமருது A.R.M. முன்பள்ளி சிறுவர்களின்
கலைவிழாவும் பரிசளிப்பு விழாவும்
வெகு சிறப்பாக இடம்பெற்றன

சாய்ந்தமருது A.R.M. முன்பள்ளி சிறுவர்களின் கலைவிழா,பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழாக்கள் நேற்று 18 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.
பெரும் எண்ணிக்கையான பெற்றார்களின் வருகையோடு இடம்பெற்ற இந்த விழாக்களுக்கு சாய்ந்தமருது A.R.M. முன்பள்ளியின் அதிபர் எம்.எச்.றிபாயா தலைமை வகித்தித்திருந்தார்.
முன்பள்ளி கல்விக்கான கிழக்கு மாகாண தவிசாளர் எம்.ஏ.அமீர்தீன் இவ்விழாக்களுக்கு பிரதம அதிதியாகவும் முன்பள்ளி கல்விக்கான அம்பாறை மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் ஏ.சி. சைபுதீன் விசேட அதிதியாகவும் இன்னும் பலர் சிறப்பு அதிதிகளாகவும் இவ்விழாக்களில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
விழாவில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் அதிதிகளையும் பெற்றார்களையும் வெகுவாக கவர்ந்திருந்தன.
சாய்ந்தமருது A.R.M. முன்பள்ளியில் சிறப்பாக ஆரம்பக் கல்வியைப் பெற்று கலை நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு திறமை காட்டிய சிறார்களுக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு அவர்களின் படம் பொறிக்கப்பட்ட அழகான  நினைவுச் சின்னம், சான்றிதழ் மற்றும் அழகான பாடசாலை பை என்பன வழங்கி மகிழ்விக்கப்பட்டது.











0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top