ஜனநாயக தேசிய முன்னணியுடன்
இணையவுள்ள கட்சிகள் தொடர்பில்
வெளிவந்துள்ள தகவல்
பரந்தளவில்
அமைக்கப்படவுள்ள ஜனநாயக தேசிய முன்னணி என்ற
அரசியல் அணிக்கு
ஐக்கிய தேசியக்
கட்சியின் செயற்குழு
தமது ஒப்புலை
வழங்கும் என்று
கட்சியின் செயலாளர்
அகில விராஜ்
காரியவசம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்
வெள்ளிக்கிழமையன்று கட்சியின் செயற்குழு
கூடும்போது இந்த ஒப்புதல் வழங்கப்படும் என்று
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,
ஜாதிகஹெல உறுமய,
தமிழ் முற்போக்கு
முன்னணி என்பன
இந்த அணியில்
இணையவுள்ளன.
அத்துடன்
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் ஒரு
அணியும் இதில்
இணையவுள்ளதாக அகிலவிராஜ் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.