மைத்திரி பதவியை உடனடியாக
இராஜினாமா செய்ய வேண்டும்!
மஹிந்தவின் நெருங்கிய சகாவின்
நியாயமான கோரிக்கை
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன உடனடியாக தனது பதவியை
இராஜினாமா செய்ய
வேண்டும் என
சிறிiலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர்
குமார வெல்கம
தெரிவித்துள்ளார்.
கொழும்பு
ஆங்கில ஊடகம்
ஒன்றுக்கு கருத்து
வெளியிட்ட அவர்
இதனை கூறியுள்ளார்.
“ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பை மீறி
செயற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அரசியல் அமைப்பை மீறி
செயற்பட்ட ஒருவர்
ஜனாதிபதி பதவியில்
இருக்க கூடாது.
அரசியல்
அமைப்பை மீறி
செயற்படும் நபர் தொடர்ந்தும் பதவியில் இருப்பது
நிலைமை மேலும்
மோசமடைய செய்யும்.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியை
இராஜினாமா செய்ய
வேண்டும்.
அப்படி
பதவியில் தொடர்ந்தும்
நீடித்தால் நிலைமைய மிகவும் மோசமடைந்து விடும்.
மறுபுறத்தில் சர்வதேச நலன், உள்நாட்டு நலன்
என்பற்றுக்கு தீங்கு ஏற்படும்.
இந்த
சூழ்நிலையின் சாத்தியமான விளைவுகளை ஜனாதிபதி புரிந்துகொள்ள
வேண்டும். ஆகையினால்
நீதிமன்றின் தீர்ப்பை ஏற்று ஜனாதிபதி நடந்துகொள்ள
வேண்டும்” என
அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.