பிரதமர் ரணில் அமைச்சர் ரிஷாத்
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட குழுவினர்
கிளிநொச்சியை நோக்கி பயணம்



பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேர்த்தல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சியை நோக்கி பயணமாகியுள்ளனர்.

வடக்கில் அண்மைக்காலமாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளை பார்வையிடும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கிளிநொச்சிக்கு பயணமாகியுள்ளார்.
பிரதமருடன் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்ட காலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேர்த்தல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிஷாத் பதியுதீன், பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, தொழில் ,தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயா கமகே உள்ளிட்ட குழுவினரும் சென்றுள்ளனர்.
இன்றைய தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் அநுராதபுரத்திற்கு வியஜம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top