ஐ.எஸ்.ஐ.எஸ். போராட்ட
இயக்கத்தில் இங்கிலாந்து இளம்பெண்
போராட்டத்தில் இணையுமாறு அழைப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ். போராட்ட இயக்கத்தில்
உள்ள இங்கிலாந்தை
சேர்ந்த இளம்பெண்
கதீஜா டேர்
ஜிஹாத் இயக்கத்தில் இணைய இஸ்லாமியர்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளார்.
ஈராக்
மற்றும் சிரியா
நாடுகளில் உள்ள
ஐ.எஸ்.ஐ.எஸ். என்னும் போராளிகள்
ஈராக்கை கைப்பற்றுவதற்காக,
கடந்த 5 மாதங்களாக
ஈராக் இராணுவத்துடன்
சண்டையிட்டு வருகிறார்கள். இந்த சண்டையில் மொசூல்,
திக்ரித், கர்பலா
உள்ளிட்ட பல்வேறு
முக்கிய நகரங்களை
அவர்கள் கைப்பற்றிக்
கொண்டனர். ஈராக்கின்
பல்வேறு நகரங்களை
நோக்கி அவர்கள்
வேகமாக முன்னேறி
வந்ததால் ஈராக்
படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவம் களத்தில்
குதித்தது.
போராளிகளின்
பல்வேறு நிலைகளை
நோக்கி அமெரிக்க
போர் விமானங்கள்
வான்வெளித் தாக்குதலையும் நடத்தின. அதே நேரம்,
ஈராக் இராணுவமும்
அவர்கள் மீதான
தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இந்நிலையில் தீவிரவாத இயக்கத்தில் உலக நாடுகளை
சேர்ந்தவர்கள் போராடுவது தொடர்பான அதிர்ச்சிக்கரமான சம்பவங்கள் வெளியாகி கொண்டே உள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். போராட்ட இயக்கத்தில் உள்ள இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண்
கதீஜா டேர்
ஜிஹாத் இயக்கத்தில்
இணைய இஸ்லாமியர்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளார்.
கதீஜா
டேர் தெற்கு
லண்டனில் உள்ள
லெவிஷாமில் பிறந்து வளர்ந்தவர். அவர் மைனர்
பெண்ணாக இருந்தபோது
இஸ்லாமிய மதத்திற்கு
மாறினார். இரண்டு
வருடங்களுக்கு முன்னதாக லண்டனில் இருந்து அவர்
சிரியாவுக்கு சென்று ஐ.எஸ்.ஐ.எஸ். போராட்ட இயக்கத்தில்
இணைந்துள்ளார்.
பின்னர் போராளிகளின் வீடியோக்களில் வெளியாகியுள்ள அவர், இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது சுயநலத்தை விட்டுவிட்டு ஜிஹாத் அமைப்பில் சேர அழைப்பு விடுத்துள்ளார். 22 வயதாகும், கதீஜா டேர் ஸ்வீடிஷ் ஜிஹாதி அபுபக்கரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. போராளிகளுக்கு எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அபுபக்கர் லண்டனில் பிறந்த போராளி என கருதப்படுவார் என்று நம்பப்படுகிறது.
பின்னர் போராளிகளின் வீடியோக்களில் வெளியாகியுள்ள அவர், இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது சுயநலத்தை விட்டுவிட்டு ஜிஹாத் அமைப்பில் சேர அழைப்பு விடுத்துள்ளார். 22 வயதாகும், கதீஜா டேர் ஸ்வீடிஷ் ஜிஹாதி அபுபக்கரை திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. போராளிகளுக்கு எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி அபுபக்கர் லண்டனில் பிறந்த போராளி என கருதப்படுவார் என்று நம்பப்படுகிறது.
இங்கிலாந்து
நாட்டை சேர்ந்தவர்களும்
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து
போராடுவது அந்நாட்டுக்கு
பெரும் தலைவலியை
ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மற்றும்
ஜெர்மனியில் இருந்து லண்டனுக்கு திரும்பும் ஜிஹாதிகளுக்கு
கடுமையான கட்டுபாடுகளும்,
அவர்கள் போராளிகள்
என்று சந்தேகிக்கப்பட்டால்
அவர்களது பாஸ்போர்ட்டையும்,
ரத்து செய்ய
இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், கதீஜா
டேர் இப்போதுவரையில்
எனக்கு சொந்த
நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று எண்ணம்
இல்லை. என்று
குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய
போராளிகள் என்று
வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், இங்கிலாந்தை
விட்டு வெளியேறி
சண்டையிடுங்கள். என்று டேர் கூறியுள்ளார். தனது
மதமாற்றம் குறித்து
பேசுகையில், நான் ஒடுக்கப்படவில்லை. அப்படிநான் ஒடுக்கப்பட்டால்
நான் இஸ்லாமிய
பெண்ணாக இருக்க
மாட்டேன். இஸ்லாம்
ஒரு ஒடுக்கப்பட்ட
மதம் என்று
நான் நினைத்து
இருந்தால், நான் அப்போதே இஸ்லாமை விட்டு
விலகியிருப்பேன். இஸ்லாம் என்ன சுதந்திரமாக்கியுள்ளது. என்று டேர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.