அகில இலங்கை கிரிக்கட்
சம்பியன்களாகத் தெரிவு செய்யப்பட்ட
கல்முனை ஸாஹிறா
அணி வீரர்களுக்கு வரவேற்பு
ஸ்ரீலங்கா
கிரிக்கட் மற்றும்
பாடசாலைகள் கிரிக்கட் சம்மேளனம் ஆகியன இணைந்து
ஒழுங்கு செய்திருந்த
அகில இலங்கை
பாடசாலைகளுக்கிடையிலான கடினபந்து 50 ஓவர்கள்
மட்டுப்படுத்தப்பட்ட
கிரிக்கட் சுற்றுப்
போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியை இறுதிப்
போட்டியில் 4 விக்கட்டுக்களினால் வெற்றிகொண்டு
அகில இலங்கை
சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை ஸாஹிறா
தேசியக்
கல்லூரி கிரிக்கட்
அணியினருக்கு இன்று வரவேற்பளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
இருந்து வருகை
தந்த கல்லூரி
கிரிக்கட் அணியினரை
கல்லூரி அதிபர்
பீ.எம்.எம்.பதுறுதீன் உள்ளிட்ட உதவி
அதிபர்கள் பெரியநீலாவணை சந்தியில் மாலையிட்டு
வரவேற்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.