ஆட்சியமைக்க ஓ.பன்னீர்
செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு:
நாளை பதவியேற்பு
விழா இருக்கும் என தகவல்.
தமிழ்நாடு
அ.தி.மு.க. தலைமை கழகத்தில்
இன்று மாலை
எம்.எல்.ஏ.க்களின்
அவசர கூட்டம்
நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்
செல்வம், சட்டமன்ற
கட்சி தலைவராக
ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து
ஓ.பன்னீர்
செல்வம், நத்தம்
விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகிய
4 பேர் குழு
தமிழக கவர்னர்
கே.ரோசய்யாவை
சந்திப்பதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.
மாலை
6.40 மணியளவில் அவர்கள் கவர்னர் ரோசய்யாவை சந்தித்து
பேசினர். அப்போது,
ஓ.பன்னீர்
செல்வம், தன்னை
சட்டமன்ற கட்சி
தலைவராக தேர்ந்தெடுத்ததற்கான,
எம்.எல்.ஏ.க்கள்
கையெழுத்திட்ட கடிதத்தை கவர்னர் ரோசய்யாவிடம் வழங்கினார்.
இதைதொடர்ந்து ஓ. பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை
ஏற்று ஆட்சியமைக்க
ஆளுநர் அழைப்பு
விடுத்தார். நாளை பிற்பகலில் பதவி
ஏற்பு நிகழ்ச்சி இருக்கும் இருக்கும்
ன கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.