கென்னடி கடிதங்கள்
2 லட்சம் டாலருக்கு ஏலம்
அமெரிக்க
முன்னாள் ஜனாதிபதி
ஜான் எப். கென்னடியின் கடிதங்கள் 2 லட்சம் டாலருக்கு
ஏலத்தில் விற்பனை
செய்யப்பட்டுள்ளது.
1943-ம் ஆண்டு ஜான் எப்.
கென்னடி, கடற்படையில்
பணியாற்றிக் கொண்டிருந்த போது, தனது போர்க்
கப்பலில் இருந்த
வீரர் ஹரோல்ட்
மார்னி யின்
மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரின் குடும்பத்தினருக்கு
கடிதங்களை எழுதியிருந்தார்.
இந்த கடிதங்களை
பாஸ்டனில் உள்ள
ஆர்.ஆர்.
ஏல நிறுவனம்
கடந்த வியாழக்கிழமை
ஏலத்தில் விட்டது.
அந்த கடிதங்களை
2 லட்சம் டாலருக்கு
ஒருவர்
வாங்கியுள்ளார்.
அதே
போன்று ஜான்
எப். கென்னடியின்
சகோதரர் ராபர்ட்
எப். கென்னடி
தனது பாடசாலை
நண்பருக்கு எழுதிய கடிதம் ஏலத்தில்
விற்பனை செய்யப்பட்டது.
அதை 31,250 டாலருக்கு ஒருவர் வாங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.