மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து
ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!
ஒருவர் பரிதாபகரமாக உயிரிழப்பு!
கல்முனைக்குடி பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று
செவ்வாய்க்கிழமை காலை 10.15 மணியளவில் கல்முனை- அக்கரைப்பற்று
நெடுஞ்சாலையில்
இரண்டு
மோடார் சைக்கிள்கள்
நேருக்கு நேர்
மோதியே இந்த
விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது
சாய்ந்தமருது மார்கட் வீதியைச் சேர்ந்த மீராலெப்பை
அப்துல் ஹமீத்
என்பவர் ஸ்தலத்தில்
உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.
60 வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
இவரது ஜனாஸா
தற்போது கல்முனை
அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில்
படுகாயமடைந்தவர் முஹம்மத் முர்ஷித் என்பவராகும் இவர் கல்முனை
மாநகர சபை
ஊழியர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச்
சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்
தொடர்பில் கல்முனைப்
பொலிசார் விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.