ஊவா மாகான
சபைத் தேர்தலில்
வாக்களிப்பதற்கு தவறிய 225664 பேர்
கடந்த
சனிக்கிழமை நடைபெற்று முடிந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை, மொனராகலை ஆகிய இரண்டு
மாவட்டங்களிலும் மொத்தமாக 2 இலட்சத்து 25 ஆயிரத்து 664 பேர் வாக்களிக்கத் தவறிவிட்டனர்.
இது மொத்த வாக்காளர்களில் 24 சத வீதமாகும்.
பதுளை
மாவட்டத்தில் 147197 பேரும் மொனராகலை மாவட்டத்தில் 78467 பேரும் இவ்வாறு வாக்களிக்கத்
தவறியுள்ளனர்.
பதுளை
மாவட்டத்தில் 609966 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர். 462769 பேர் மாத்திரமே
தமது வாக்குகளைச் செலுத்தியிருந்தனர்.
இது
போன்று மொனராகலை மாவட்டத்தில் 332764 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
254297 பேர் மாத்திரமே தமது வாக்குகளைச் செலுத்தியிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.