சம்மாந்துறை கல்வி வலயத்தில்
க.பொ. த. உயர்தர மாணவர்களுக்கான
ஜனாதிபதி புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு
க.பொ. த. உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை
கல்வி வலயத்தில் இருந்து 103 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்மாணவர்களுக்காக புலமைப்பரிசில் வழங்கும் விழா 15. 10. 2014 ம் திகதி இன்று சம்மாந்துறை அல் - மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் வலயக் கல்வி பணிப்பாளர் எம். எஸ். எஸ் நஜீம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான அல் - ஹாஜ் ஏ. எம். எம் நௌஷாட் , கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம். எல். ஏ அமீர் ஆகியோர்கள்
கலந்து கொண்டனர். சம்மாந்துறை உதவி வலயக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்ட இவ்வைபவத்தில்
ஒரு மாணவருக்கு ஒதுக்கப்பட்ட 12 000 ரூபாய் ஜனாதிபதி புலமைப்பரிசில் இருந்து முதல் கட்டமாக
6 000 ரூபாய் வீதம் 103 மாணவர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.
(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.