சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள
தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த
பூங்காவின்
பெயர் பலகை
மீது தாக்குதல்!
முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரும்
நீதி அமைச்சருமான
ரவூப் ஹக்கீமினால்
சாய்ந்தமருதில் திறந்து வைக்கப்பட்ட தலைவர் அஷ்ரப்
ஞாபகார்த்த பூங்காவின் பெயர் பலகை மீது இனம்
தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பெயர் பலகை சேதமடைந்துள்ளது.
கடந்த
23 ஆம் திகதி இப்பூங்கா திறந்து வைக்கப்பட்ட போதிலும்
நிர்மாணப் பணிகள்
தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டிருப்பதாகவும் சிறுவர்களுக்கான விளையாட்டு
உபகரணத் தொகுதிகள்
உள்ளிட்ட இன்னும்
சில நவீன
வசதிகள் மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் இப்பணிகள் அனைத்தும் நிறைவுற்றதும் எதிர்வரும் நவம்பர் மாத இறுதியிலேயே கல்முனை மாநகர சபையிடம் இப்பூங்காவை கல்முனை மாநகர சபையிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் பெயர் சூட்டப்பட்ட இப்பூங்காவை அவரது 66வது பிறந்த தினமான ஒக்டோபர் 23 ஆம் திகதி ஏற்கனவே திட்டமிட்டபடி திறக்க வேண்டும் என கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் விரும்பியதன் பேரிலேயே இப்பூங்கா சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.