குழந்தைகளைக்
கொன்று விட்டு
தாயும் தற்கொலை!
தனது
இரு குழந்தைகளுக்கு ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு
தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று இலண்டனில் இடம்பெற்றுள்ளது.
இலண்டனின்
ருஸ்லிப் பகுதியில்
வசித்து வந்தவர்தான்
ஹீனா. இவருக்கு
ஜாஸ்மின் (9), ப்ரிஷா (4) என இரு மகள்கள்
இருந்தனர். தனது கணவரின் பெற்றோருடன் வசிக்க
ஹீனாவிற்கு விருப்பம் இல்லை என கூறப்பட்ட
நிலையில், அவர்
தனது இரு
மகளுக்கும் ஆசிட் கொடுத்து கொலை செய்துவிட்டு
தானும் தற்கொலை
செய்துக்கொண்டார்.
இத்
துயர சம்பவம் குறித்து தெரிவித்துள்ள
ஹீனாவின் கணவர்
கல்பேஷ், 'நானும்
ஹீனாவும் எங்கள்
மகள்களோடு நிம்மதியாக
வாழ்ந்தோம். அவள் இறப்பதற்கு முன்பு வரை
அவள் மகிழ்ச்சியாக
இருந்ததாகவே நான் எண்ணினேன்.
நாங்கள்
என் பெற்றோருடன்
வசித்துவந்தது ஹீனாவிற்கு பிடிக்காது என எனக்கு
தெரியும். ஆனால்,
அவள் ஒருபோதும்
தனது வாழ்வை
முடித்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததில்லை. இச்சம்பவம் எனக்கு
மிகுந்த அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது என கல்பேஷ்
தெரிவித்துள்ளார்.
ஹீனாவின்
தோழியான பிரனாலி
சாம்பிரே கூறுகையில்,
தனது மாமனார்
கடுமையாக நடந்துகொள்வதாக
ஹீனா தன்னிடம்
தெரிவித்தாக கூறியிருக்கிறார். ஆனால், இப்படி தற்கொலை
செய்து கொள்வார்
என்று தான்
எதிர்பார்க்கவில்லை என அவர்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.