தென்னாபிரிக்க கால்பந்து
அணியின்
தலைவர் சுட்டுக்
கொலை!
தென்னாபிரிக்க
கால்பந்து அணியின் தலைவர் சென்கோ மெய்வா சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சென்கோ மெய்வாவின் வீடு ஜோகன்னஸ்பர்க் அருகே உள்ள
ஒசூருல்ஸ் நகரில் உள்ளது. நேற்று இரவு 8 மணியளவில் அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம
நபர்கள் அவரை சரமாரியாக சுட்டதில் அதே இடத்தில் அவர் பலியானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவரது
கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை. இது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர். கொலையாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு
தொகையான பரிசு வழங்கப்படும் என்று அந்நாட்டுப்
பொலிஸார் அறிவித்து உள்ளனர். இந்த சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி
உள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.