பாகிஸ்தானில் சிறுமியை கற்பழித்து கொன்ற
காமுகனுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றம்
பாகிஸ்தானில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற காமுகனுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தானில் லாகூர் பகுதியை சேர்ந்தவன் இம்ரான் அலி (30). இவன் 9 சிறுமிகளை கற்பழித்தான்.
அவர்களில் 7 வயது சிறுமியை கற்பழித்து கொன்று அவளது உடலை குப்பையில் வீசினான். இது குறித்து அவனை கைது செய்த பொலிஸார் லாகூர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. அத்துடன் 3 ஆயுள் தண்டனை மற்றும் 23 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
அவன் லாகூரில் உள்ள காட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் மாஜிஸ்திரேட்டு அடில் சர்வார் முன்நிலையில் இம்ரான் அலி தூக்கில் போடப்பட்டான்.
இந்த
வழக்கு லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு
நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த
வாரம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த
நீதிபதி, இம்ரான் அலிக்குத் தூக்கு
தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து, அக்டோபர் 17-ம் திகதி தண்டனையை நிறைவேற்ற
உத்தரவிட்டார்.
ஆனால்,
கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை அமின் அன்சாரி
லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
செய்திருந்தார். அதில் கொலைக்குற்றவாளி இம்ரான்
அலியை மக்கள் பார்க்கும் வகையில்,
பொதுஇடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள்
சர்தார் ஷாஹிம் அகமது, ஷாபாஸ்
ரிஸ்வி ஆகியோர் மனுவைத் தள்ளுபடி
செய்து, சிறையிலேயே தூக்கிலிட உத்தரவிட்டனர்.
இதையடுத்து,
இன்று காலை லாகூரில் உள்ள
கோட் லாக்பத் சிறையில், மாஜிஸத்திரேட்
அதில் சர்வார் முன்னிலையில், இம்ரான்
அலிக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தண்டனை அந்தச் சிறுமியின்
மாமா முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
கசூர்
நகரைச் சேர்ந்த இம்ரான் அலி,
இதுவரை 9 பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார். அனைத்துப் பலாத்காரங்களும் சிறுமிகளையும், குழந்தைகளையும் செய்தவையாகும். இம்ரான் அலி தூக்கிலிடுவதையொட்டி,
சிறையைச் சுற்றி ஏராளமான பொலிஸார்
குவிக்கப்பட்டிருந்தனர்.
இம்ரான்
அலி தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்ததும், கொல்லப்பட்ட
சிறுமியின் தந்தை, தாய் ஆகியோர்
பாகிஸ்தான் நீதித்துறைக்குக் கண்ணீர் மல்க நன்றி
தெரிவித்தனர்.
தூக்கில் போடப்பட்ட பின் இம்ரான் அலியின் உடல் அவனது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
![]() |
| லாகூரில் சிறைக்கு வெளியே இன்று காத்திருந்த சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் |


0 comments:
Post a Comment