டிசம்பர் 07 இல் ஜனாதிபதி தேர்தல்?
ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம்
07ஆம் திகதி அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலுக்கான அழைப்பை விடுக்காமல்,
தமது முழுப் பதவிக்காலமும் பதவியில் இருக்க முடிவு செய்தால், ஜனாதியதி தேர்தல் வரும் நவம்பர் 09ஆம் திகதிக்கும் டிசம்பர் 09ஆம் திகதிக்கும் இடையில் நடத்தப்பட வேண்டும்.
2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை ஒக்டோபர்
22 ஆம் திகதி இறுதி செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது,
அன்றைய தினத்தில் தேர்தலுக்காக அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டால், குறைந்தபட்சம் அடுத்த நான்கு வாரங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
எனவே, டிசம்பர் 07ஆம் திகதி சனிக்கிழமை அல்லது அதற்கு முந்திய ஒரு சனிக்கிழமையில் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது என்றும், தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.