பாலியல் ஊக்குவிப்பு மாத்திரை கடத்தல் முறியடிப்பு
சந்தேக நபர் சுங்க அதிகாரிகளால் கைது
மலேசியா நாட்டிலிருந்து
பெருந்தொகையான பாலியல் ஊக்குவிப்பு மாத்திரைகளை இலங்கைக்குள்
கடத்தி வந்த
சந்தேக நபரை
சுங்க அதிகாரிகள்
கைது செய்துள்ளனர்.
கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச்
சேர்ந்த இலங்கைப்
பிரஜையே இவ்வாறு
பாலியல் மாத்திரைகளுடன்
கைது செய்யப்பட்டிருப்பதாக
சுங்கத் திணைக்களத்தின்
பேச்சாளர் சுனில்
ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
மலேசியாவிலிருந்து
யூ.எல்
315 விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்த இந்
நபர் கிறீன்
செனலுக்கூடாக வெளியேற முற்பட்டபோதே சுங்க அதிகாரிகள்
அவரிடமிருந்த பெருந்தொகையான பாலியல் ஊக்குவிப்பு மாத்திரைகளை
கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்டுள்ள
மாத்திரைகளின் மொத்த பெறுமதி 04 இலட்சத்து 98 ஆயிரத்து
952 ரூபாவென்றும் சுங்கத்திணைக்களம் மதிப்பீடு
செய்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.