தூபி மீதேறி புகைப்படங்கள்
எடுத்த மாணவர்கள்:
விடுதலை செய்வது தொடர்பாக
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பேச்சுவார்த்தை
கிரலாகல
தூபி மீதேறி
புகைப்படங்கள் எடுத்தமைக்காக கைது செய்யப்பட்டுள்ள பல்கலைக்கழக
மாணவர்களை விடுதலை
செய்வது தொடர்பாக வீடமைப்பு,
நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித்
பிரேமதாசவுடன், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், எதிர்வரும்
28ஆம் திகதி
பேசவுள்ளதாக, அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த
விவகாரம் தொடர்பாக,
அமைச்சர் சஜித்
பிரேமதாசவுடன், அலைபேசியில் உரையாடியுள்ளதாகவும்
மாணவர்கள் தவறுதலாக
இவ்வாறான செயலை
மேற்கொண்டு இருப்பதால், மாணவர்களை கருணை அடிப்படையில்
விடுதலை செய்ய
நடவடிக்கை எடுக்குமாறும்
அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் கோரியுள்ளார்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன்,
அனுராதபுர பொலிஸ்
உயர் அதிகாரிகளுடனும்
பேசிய அமைச்சர், மாணவர்களின்
எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை விடுதலை
செய்ய ஆவண
செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.