கிராமசேவகர் பணியை இழிவுபடுத்தியதால்
‘கோப்பி கடை’ டிவி தொடரை நிறுத்த
ஜனாதிபதி சிறிசேன உத்தரவு
இந்திய ஊடகம்
செய்தி வெளியீடு
இலங்கையில் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கிராம சேவகர் பணி தொடர்பான நிகழ்ச்சியை நிறுத்த ஜனாதிபதி சிறிசேன உத்தரவிட்டார் என இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இலங்கையில்
அரசு தொலைக்காட்சியில்
‘கோப்பி கடை’
என்ற பெயரில்
சிங்கள தொடர்
ஒளிபரப்பாகி வருகிறது.
இதில்
“கிராம சேவகருக்கு
பைத்தியம்” என்ற பெயரில் ஒரு பாகம்
ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதில் கிராம சேவகருக்கு
பைத்தியம் பிடித்து
வாள் எடுத்துக்
கொண்டு வருவது
போன்ற காட்சிகள்
இடம்பெற்று இருந்தன.
இந்த
தொலைக்காட்சி தொடர் பற்றி அறிந்த ஜனாதிபதி சிறிசேனஉடனடியாக
தொடரை நிறுத்த
உத்தரவிட்டார். இதையடுத்து அந்த தொடரின் “கிராம
சேவகருக்கு பைத்தியம்” என்ற பெயரில் ஒளிபரப்பான
பாகம் பாதியிலேயே
நிறுத்தப்பட்டது.
இதற்கான
காரணம் பற்றி
விசாரித்தபோது, ருசிகர தகவல் வெளியானது. ஜனாதிபதி
சிறிசேன, ஆரம்பத்தில்
பொலன்னறுவை கிராமத்தில் கிராம சேவகராக பணியாற்றினார்.
அதுதான் அவரது
முதலாவது அரசு
பணியாகும். இதனால் தனது முதலாவது அரசு
பணியை அவமதிக்கும்
விதமாக டி.வி. தொடர்
எடுக்கப்பட்டு இருந்ததால் அதை நிறுத்த உத்தரவிட்டதாக
தெரிய வந்தது.
கோப்பி
கடை என்ற
சிங்கள தொடர்
அன்றாட அரசியல்
நிகழ்வுகள் மற்றும் சமூக நிகழ்வுகளை அடிப்படையாக
கொண்டு தயாரிக்கப்பட்டு
வருகிறது என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.