தேசிய கல்வியியற் கல்லூரிக்கான
விண்ணப்பம் கோரல்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய
இறுதித் திகதி பெப்ரவரி 15 ஆகும்.
தேசிய
கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும்,
மூன்று வருட
கால, சேவை
முன் கற்பித்தலில்
தேசிய டிப்ளோமா,
பாடநெறிக்கான விண்ணப்பங்கள் நாளை (25) வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ள
வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.
2016, 2017 ஆம் ஆண்டுகளில்
க.பொ.த உயர் தர பெறுபேறுகளின்
அடிப்படையில், ஒரே தடவையில் இரு தொகுதி
பயிலுநர்களை இம்முறை தேசிய டிப்ளோமா பாடநெறிக்கு
உள்வாங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்களை
அனுப்ப வேண்டிய
இறுதித் திகதி
பெப்ரவரி 15 ஆகும்.
விண்ணப்பதாரிகள்
ஜனவரி முதலாம்
திகதியன்று 25 வயதுக்கு மேற்படாதவர்களும் சமய பாடநெறிக்காக
விண்ணப்பிக்கும் மதகுருமார்கள் மற்றும் வணக்கத்துக்குரியவர்கள் 30 வயதுக்கு மேற்படாதவர்களாகவும்
இருத்தல் வேண்டுமென்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.