இராணுவ வாகனம் கவிழ்ந்து
மேஜர் உள்ளிட்ட 2 அதிகாரிகள் பலி
நான்கு பேர் படுகாயம்
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்குச்
சென்ற இராணுவ
வாகனம், முல்லைத்தீவில்
விபத்துக்குள்ளானத்தில், அதில் பயணம்
செய்த மேஜர்
உள்ளிட்ட இரண்டு
அதிகாரிகள் பலியாகினர். நான்கு பேர் படுகாயம்
அடைந்தனர்.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவு- முள்ளியவளை
வித்தியானந்தா கல்லூரியில் நடந்த நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இந்த
நிகழ்வுக்காக இராணுவத் தலைமையகத்தில் இருந்து சென்ற
ஜீப் ஒன்று,
அங்கிருந்து வவுனியா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த
போது, நெடுங்கேணி
-தட்டாமலை பகுதியில்
உள்ள வளைவில்
வேகக் கட்டுப்பாட்டை
இழந்து குப்புறக்
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று
பிற்பகல் 1 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த
விபத்தில், அம்பேபுஸ்சவை சேர்ந்த 33 வயதுடைய
மேஜர் அசங்க
லியனகே மற்றும்
30 வயதுடைய கோப்ரல் தர அதிகாரி ஆகியோர்
அந்த இடத்திலேயே
உயிரிழந்தனர்.
மேலும்
4 இராணுவத்தினர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.