சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். வித்தியாலயத்தின்
“துளிர்கள் நிகழ்வு”
19 மாணவர்களுக்கு பதக்கம்,
சான்றிதழ், நினைவுச் சின்னம்
சாய்ந்தமருது
கமு/கமு/ ஜீ.எம்.எம்.எஸ் வித்தியாலயத்தில்
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும்
'துளிர்கள் நிகழ்வு' சாய்ந்தமருது பேல்ஸ் வரவேற்பு
மணடபத்தில் இடம்பெற்றது.
பெற்றோர்களின்
ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில்
இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு
கல்முனை வலயக்
கல்விப் பணிப்பாளர்
எம்.எஸ்.அப்துல் ஜலீல்
பிரதம அதிதியாக
கலந்து கொண்டார்.
.
இதில்
இவ்வருடம் சாய்ந்தமருது
ஜீ.எம்.எம்.எஸ்
வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில்
சித்தியடைந்த 19 மாணவர்களுக்கும் பதக்கம், நினைவுப் பரிசு,
சான்றிதழ், நினைவுச் சின்னம் என்பன அதிதிகளால்
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது
இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் நினைவுப் பரிசு
வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.