கோத்தா 29ஆம் திகதி புதுடெல்லி பயணம்

ஜெய்சங்கர் அறிவிப்பு

இந்தியப் பிரதமர்  நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று,   ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 29ஆம் திகதி புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

நேற்று மாலை திடீர் பயணமாக கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவும் கலந்து கொண்டார்.

இதன்போது, அவரை புதுடெல்லிக்கு வருமாறு, இந்திய பிரதமரின் சார்பில் நேரில் அழைப்பு விடுத்தார்.

இதனை ஏற்றுக் கொண்டு, வரும் 29ஆம் திகதி, கோத்தாபய ராஜபக்ச புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top