முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின்
வாகனத் தொடரணி மீது தாக்குதல்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது நேற்று (24) புத்தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மதுரங்குளி கணமூலை பகுதியில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தொகுதியில் மாத்திரம் ஐ.தே.மு அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றிருந்தது.
இந்த நிலையில், குறித்த தேர்தலில் ஐ.தே.மு வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மதுரங்குளி கணமூலை பகுதிக்கு முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அ.இ.ம.கா புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி ரஹீம் உள்ளிட்டோர் பயணம் செய்தனர்.
இதன்போது கணமூலை பிரதேசத்தில் ௯டியிருந்த சிலர் , முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த வாகனப் பேரணி மீது தாக்குதல் நடத்தியதுடன், அவரின் வருகையை எதிர்த்து வீதியில் டயர்களையும் எரித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் பயணித்த வாகனத் தொடரணி வாகனம் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.