முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண காலமானார்
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ண (வயது-88) நேற்று மாலை கண்டியில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
உடல்நலக் குறைவினால் டி.எம்.ஜயரட்ண, கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான டி.எம்.ஜயரட்ண, 1970ஆம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார்.
2010ஆம் ஆண்டு தொடக்கம், 2015ஆம் ஆண்டு வரை- மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இவர் இலங்கையின் 14 ஆவது பிரதமராக பதவி வகித்திருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.