புதிய அரசாங்கத்தில்
ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷாட் பதியூதீன்
இணைய வாய்ப்பில்லை!
தினேஷ் குணவர்தன அறிவிப்பு
புதிதாக அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தில் ரவூப் ஹக்கீம் மற்றும் றிஷாட் பதியூதீன் ஆகியோர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கோ, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிஷாட் பதியூதீனிற்கோ ஒருபோதும் இணைந்துகொள்ள வாய்ப்பளிக்கப் போவதில்லை என்று எமது கட்சி தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.