நாளை இரவு முதலாவது
அமைச்சரவை கூட்டம்
ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஸவின் கன்னி
அமைச்சரவை கூட்டம்
நாளை (26) ஆம்
திகதி நடைபெறவுள்ளது.
முன்னாள்
ஜனாதிபதி மற்றும்
பிரதமர் ஆகியோர்
தமது பதவிகளில்
இருந்து விலகியதை
அடுத்து புதிய
அமைச்சரவையை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்கமைய
கடந்த வியாழக்கிழமை
15 பேரை கொண்ட
தற்காலிக அமைச்சரவையை
ஜனாதிபதி நியமித்தார்.
அதற்கமைய
புதிய அமைச்சர்களாக
நியமனம் பெற்ற
சகல அமைச்சர்களையும்
உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ
மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் முதலாவது அமைச்சரவை
கூட்டம் நாளை
இடம்பெறவுள்ளது.
அந்த
வகையில் நாளை
இரவு முதலாவது
அமைச்சரவை கூட்டத்தை
நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.