சிவலிங்கம், மஸ்தான்,இராமநாதன் .
வியாழேந்திரன் உள்ளிட்டோரும்
மாவட்ட இணைப்புக் குழு தலைவர்கள்
நேற்று இடம்பெற்ற மாவட்ட இணைப்புக் குழுக்களுக்கான புதிய தலைவர்கள் நியமனத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்து சிவலிங்கம், காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன், எஸ்..வியாழேந்திரன் உள்ளிட்டோரும், மாவட்ட இணைப்புக் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட மட்டத்தில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களுடன் இணைந்து ஒருங்கிணைத்தல், அமுல்படுத்தல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகள், இந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பணிகளாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.