அமைச்சில் இருந்து விடைபெற்றார்
பைசல் காசிம்
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவின் தலைமையிலான புதிய அரசுக்கு வழிவிட்டு ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அமைச்சரவை விலகிக்கொண்டதைத் தொடர்ந்து சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் இன்று அமைச்சில் இருந்து விடை பெற்றுச் சென்றார்.
சுகாதார அமைச்சில் பிரியாவிடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.நான்கு வருடங்களுக்கு மேலாக சுகாதார இராஜாங்க அமைச்சராக இருந்து தன்னால் முடியுமான அளவு மக்களுக்கு சேவை ஆற்றி வந்தார்.வடக்கு-கிழக்கிற்கு மாத்திரமன்றி-தனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி நாடு பூராகவும் உள்ள அனைவருக்கும் சுகாதார சேவைகள் சென்றடையும் வண்ணம் பல வேலைத் திட்டங்களை அவர் முன்னெடுத்தார்.
தான் தொடக்கி வைத்துள்ள பல வேலைத் திட்டங்களை புதிதாக வருகின்ற சுகாதார அமைச்சர் முடக்கிவிடாமல் மக்களுக்காக முடித்து வைக்க வேண்டும் என்பதே பைசல் காஸிமின் விருப்பமாகும்.
இந்த அமைச்சில் இருந்துகொண்டு மக்களுக்குச் சேவையாற்றுவதற்காக தன்னோடு சேர்ந்து பாடுபட ஊழியர்கள்,செயலாளர்கள்,அதிகாரிகள் ,வைத்திய துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்தத் தருணத்தில் பைசல் காசிம் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இருந்து தான் விடை பெறுகின்றபோதிலும் அரசியலில் இருந்துகொண்டு மக்களுக்குத் தன்னால் முடிந்த அனைத்துச் சேவைகளையும் தான் தொடர்ந்து செய்வேன் என்று பைசல் காசிம் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.