கொலன்னாவை, ராஜகிரிய, நாவல உள்ளிட்ட
சில பிரதேசங்களுக்கு 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு
இன்று காலை 9.00 மணி தொடக்கம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கொலன்னாவை, ராஜகிரிய, நாவல உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு நகர அபிவிருத்தி திட்ட நடவடிக்கை காரணமாக இன்று காலை 09.00 மணி தொடக்கம் நாளை முற்பகல் 09.00 மணி வரை நீர் விநியோகம் இவ்வாறு தடை செய்யப்படுவதாக அந்த சபை தெரிவித்துள்ளது.
கொலன்னாவை நகரசபையின் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசங்கள், ராஜகிரிய, மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயகபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரை வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து கிளை வீதிகளை அண்டிய பிரதேசங்களில் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.