புதிய இராஜாங்க அமைச்சர்கள்
நாளை பதவிப்பிரமாணம்
புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நாளையதினம் (27) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர்கள் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதோடு, ஜனாதிபதி செயலகத்தில் இப்பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை (22) 15 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் இதன்போது நியமன கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.