புதிய
தேர்தல் முறையூடாக நடத்துவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ள
உள்ளூராட்சி
மன்றத் தேர்தல் தொடர்பான
வர்த்தமானியில் கைச்சாத்திட்டார்
பைஸர் முஸ்தபா.!
புதிய தேர்தல் முறையூடாக
நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான
வர்த்தமானி அறிவித்தலில் சற்றுமுன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற
அமைச்சர் பைஸர் முஸ்தபா கைச்சாத்திட்டார்.
அவ்வர்த்தமானி
அறிவித்தலில், ஒவ்வொரு உள்ளூராட்சி மன்றங்களினதும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
வெளியிடப்படவுள்ளன. அத்துடன் இழுபறி
நிலையிலிருந்த அம்பகமுவ மற்றும் நுவரெலியா உள்ளூராட்சி மன்றங்களின் பிரச்சினைகளுக்கும்
தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே குறித்த உள்ளூராட்சி மன்றங்களை
தலா மூன்று உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரித்துள்ளதுடன் அதுவும் இன்றைய
வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.