மீண்டும் தன் எளிமையை நிரூபித்துள்ள
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
வைரலாகும் புகைப்படம்
கட்டார்
சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன பல
சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதியின்
இந்த பயணத்தில்
அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர்
கலந்துகொண்டுள்ளார்கள். டோஹாவில் உள்ள
விடுதி ஒன்றில்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தங்கியிருந்தார்.
இதன்போது
ஜனாதிபதி கட்டாரில்
உள்ள இலங்கையர்களை
சந்தித்ததுடன் அவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
ஜனாதிபதியின்
செயற்பாடுகள் குறித்து கட்டாரில் உள்ள இலங்கையர்கள்
மகிழ்ச்சி வெளியிட்டதுடன்,
தமது வாழ்த்துக்களையும்
தெரிவித்திருந்தார்கள்.
சர்வதேசத்தின்
மத்தியிலும், இலங்கை மக்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன எளிமையான ஒருவர் என்ற
கருத்து காணப்படுகின்றது.
எவ்வளவு
பெரிய ஒருவராக
இருந்தாலும், சிறிவராக இருந்தாலும், அனைவருடனும் சரிசமனாக
பேசும் சுபாவம்
கொண்டவர் மைத்திரி.
அந்த
வகையில் கட்டார்
சென்றுள்ள ஜனாதிபதி
தன்னுடன் வந்த
ஏனைய மக்கள்
பிரதிநிதிகளுடன், வெளியில் அமர்ந்து சாதாரண ஒரு
மனிதரைப்போன்று பேசி சிரிப்பது போன்ற புகைப்படம்
சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதன்போது,
ரவூவ் ஹக்கீம்,
றிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா முஜிபுர் ரஹ்மான், அசாத்
சாலி, அஜித்
பீ பெரேரா,
ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஒரு
கட்டடத்திற்கு வெளியில் அமர்ந்து சாதாரணமாக பேசியுள்ளார்கள்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.