பள்ளிவாசல் முன் பொலிசார் குவிப்பு ;
வவுனியாவில் பதற்றம்

வவுனியா நகரப் பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகளை மூடுமாறு வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் பெருமளவு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து வவுனியா நகரபள்ளிவாசல் பகுதியில் பதற்றநிலைமை நிலவிவருவதாக அறிவிக்கப்படுகின்றது.
இன்று காலை வவுனியா நகர பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று இடம்பெறவிருந்த வேளையிலேயே திடீரென பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சற்று பதற்றமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.

எனினும் இளைஞர்களினால் மேற்கொள்ளப்படவிருந்த குறித்த  ஆர்ப்பாட்டம் போராட்டம் சற்று நேரத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top