சாய்ந்தமருதில் 3 நாள் தொடராக நோன்பு நோற்று

கடை அடைப்புச் செய்வதற்கு முடிவு




சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை முன்வைத்து நாளை 30 ஆம் திகதி திங்கள் கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு நோன்பு நோற்று, விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுவதுடன் கடையடைப்பு செய்வதற்கும்  சாய்ந்தமருது மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஆகியன ஒன்றினைந்து சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
இது போன்று சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைமையிலான பொது அமைப்புக்கள் தீர்மானித்து  முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கமானது எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அதன் விஷேட கூட்டத்தில் தீர்மானம் எடுத்திருபதாகவும் அறிவிக்கப்படுகின்றது.

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையான தனியான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையானது, அனைத்துக் கட்சிகளின் தலைமைகளினாலும் அங்கீகரிக்கப்பட்டு  இழுத்தடிப்புச் செய்து ஏமாற்றப்பட்ட நிலையில், அதனைப் பெற்ருக்கொள்ளும் நோக்கமாக  அரசுக்கும். அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளுக்கும் அழுத்தத்தை பிரயோகிக்கும் வண்ணம்சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும் பெரிய பள்ளிவாசல், உலமா சபை மற்றும் பொது அமைப்புகளின் ஒன்றியமும் ஒன்றினைந்து சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற கூட்டத்தில் பின்வரும் தீர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

* எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு கடையடைப்பு  செய்தல்.
* வயது வந்த அனைவரும் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்று, விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுவது.
* உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் பள்ளிவாசல் மேற்கொண்ட முன்னெடுப்புகள் தொடர்பில் மக்களை தெளிவூட்டும் பொதுக் கூட்டமும் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தேவேளை, சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு வர்த்தக சங்கமானது எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தொடர்ச்சியாக 3 தினங்களுக்கு சாய்ந்தமருது, மாளிகைக்காடு பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க அதன் விஷேட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top