பாடசாலை மாணவர்களுக்கு

சத்துள்ள பகல் உணவு

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

பாடசாலை மாணவர்களுக்கு சத்துள்ள பகல் உணவை வழங்குவதற்கு தாம் எதிர்பார்த்திருப்பதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில், மாணவர்களுக்கு பகலுணவை வழங்கவேண்டும் என்பது தமது நீண்டகால கனவாகும். இந்த கனவை நனவாக்குவதற்காக ஊழல் மற்றும் முறைகேடுகளை கல்வி அமைச்சில் இல்லாதொழித்து அதன்மூலமான நிதியை இதற்கு பயன்படுத்த தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த ஆலோசனையை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரிடம் சமர்ப்பிப்பதற்கு தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.



0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top