கொழும்பு துறைமுகத்தில்

தென்கொரிய நாசகாரி போர்க்கப்பல்


தென்கொரியக் கடற்படையின் நாசகாரி போர்க்கப்பல் ஒன்று, எண்ணெய் விநியோக துணைக்கப்பலுடன் நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

தென்கொரிய கடற்படையின் நாசகாரி கப்பலான, காங் காம் சான், எரிபொருள் விநியோக துணைக் கப்பலான, ஹவாசியோனுடன் இணைந்து நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக கொழும்பு வந்துள்ளது. இவற்றில் 630 மாலுமிகள் உள்ளனர்.
கடற்படையினர் இந்தப் போர்க்கப்பல்களுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர்.
நாளை இந்தப் போர்க்கப்பல்கள் கொழும்பில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளன. இலங்கையில், தங்கியிருக்கும் போது, தென்கொரிய கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக தென்கொரிய தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்தியக் கடற்படையின் ஐஎன்ஸ்எஸ் சுற்லேஜ் என்ற ஆய்வுக் கப்பலும் நேற்று முன்தினம் கொழும்பு வந்துள்ளது.
கடற்படையினருடன் இணைந்து சமுத்திரவியல் ஆய்வை மேற்கொள்வதற்காக, இந்தக் கப்பல் கொழும்பு வந்துள்ளது.

ஐஎன்ஸ்எஸ் சுற்லேஜ் டிசம்பர் 21ஆம் திகதி வரை இலங்கை கடற்பரப்பில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top