தீர்வு கிடைக்கும்வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை
கைது செய்யுங்கள் சிறைசெல்லவும் தயார்!!
பள்ளிவாசல் தலைவர் பொலிஸாரிடம் தெரிவிப்பு
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம்
பிரகடணப்படுத்தும் வரை மறியல் போராட்டத்திலிருந்து ஒரு அடியேனும் பின்வைக்கமாட்டோம். நாங்கள் நியாயத்துக்காக போராடுகிறோம். எங்களது போராட்டத்தை தடை செய்யாதீர்கள் வேண்டுமானால் எங்களை கைதுசெய்து சிறையில் அடையுங்கள் என சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாயலின் தலைவர் வை.எம்.ஹனிபா அம்பாறை பிராந்திய எஸ்.எஸ்.பி. யிடம் தெரிவித்தார்.
உள்ளுராட்சி சபை கோரிக்கையை முன்வைத்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைமையில்
முன்னெடுக்கும் போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று
2017-10-31 ஆம் திகதி பாரிய வீதிமறியல் போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
குறித்த மறியல் போராட்டத்தை ஒதுங்கி நின்று முன்னெடுத்து போக்குவரத்துக்கு வழிவிடுமாறு எஸ்.எஸ்.பி. கூறியபோதே தலைவர் எங்களை கைது செய்யுங்கள், ஆனால்
போராட்டத்தை தீர்வு கிடைக்கும் வரை கைவிடமாட்டோம் என்று தெரிவித்தார்.
தங்களது கோரிக்கை இன்று நேற்று முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல, இது யாருக்கும் எதிரானதும் அல்லஎமது மக்களின்
நியாயமான கோரிக்கையை பெற்றுக் கொடுப்பதற்கு பொலிஸாரும் ஒத்துழைக்க வேண்டும்.
தீர்வு கிடைக்கும்வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை எதிர்காலத்தில் மேலும் இப்போராட்டம் வலுப்பெறும் என்றும் பள்ளிவாயல்
தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.