இரண்டரை வருடங்களுக்கு முன்    

சாய்ந்தமருதில் 2015-07-31 அன்று இடம்பெற்ற

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்

சாய்ந்தமருது மக்களுக்கு வழங்கிய திடவாக்கு
                                                                                                               

சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையான உள்ளுராட்சி சபைக் கோரிக்கையை தேர்தலைத் தொடர்ந்து பிரகடனப்படுத்துவதற்கான எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.
குறுகிய கால எல்லைக்குள் எங்களது கைக்கு வழங்கப்பட்ட சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது. அவற்றை பெற்றுக்கொடுப்பது எங்களது கடமை என முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் 2015-07-31 அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்..எம்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் வூப் ஹக்கீம், மேலும் தெரிவித்ததாவது,
புதிய கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாகவும் சாய்ந்தமருது உள்ளிட்ட கல்முனைத் தொகுதியை வளர்ச்சியடைந்த நகரங்களின் நிலைக்கு உயர்த்துவதற்கான சகலவித ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு தன்னை சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் தனித் தலைவராக பிரகடனப்படுத்தியபோது அப்போது உங்களிடம் காணப்பட்ட உத்வேகத்தையும் உணர்வலைகளையும் இன்றும் உணர்ந்துள்ளேன்.
கட்சியின் தலைமைத்துவத்தை தந்து கௌரவித்த சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளை புறக்கணிக்கவேண்டிய தேவை எதுவும் எனக்கு இல்லை. குறுகிய கால எல்லைக்குள் எங்களது கைக்கு வழங்கப்பட்ட சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி சபைக் கோரிக்கை நியாயமானது. அவற்றை பெற்றுக்கொடுப்பது எங்களது கடமை இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் சாய்ந்தமருதில் 2015-07-31 அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

2001ம் ஆண்டு தன்னை சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம் காங்கிரஸின் தனித் தலைவராக பிரகடனப்படுத்தியபோது அப்போது உங்களிடம் காணப்பட்ட உத்வேகத்தையும் உணர்வலைகளையும் இன்றும் உணர்ந்துள்ளேன். கட்சியின் தலைமைத்துவத்தை தந்து கௌரவித்த சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளை புறக்கணிக்கவேண்டிய தேவை எதுவும் எனக்கு இல்லைஎன்று கூறிய ஹக்கீம் சாய்ந்தமருது மக்களைப் பார்த்து . அவர்கள் தோண்டிய  குழிக்குள் அவர்களாகவே விழுந்துள்ளார்கள்  என்று இறக்காமத்தில் பேசியிருப்பதை எப்படி எளிதில் மறப்பது?


(2001 02.06 ஆம் திகதி வெளியான வீரகேசரியின்
பிரதான தலைப்புச் செய்தியே இது)

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top