ஹிஸ்புல்லாவின் காத்தான்குடியில்
அசத்திய மஹிந்த
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டார்.
காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடும் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜி.எல்.பீரிஸ் உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள்,அரசியல் பிரமுகர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிங்களத்திலும், தமிழிலும் காத்தான்குடி மக்கள் மத்தியில் உரையாற்றியதோடு மேடையில் இருந்து இறங்கி மக்களோடும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவின் முக்கியமான இடமாக கருதப் படும் காத்தான்குடியில் மஹிந்த சென்று அசத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.