தேர்தல் தினத்தன்று முப்படைகளும் ரோந்து
– தேர்தல் ஆணைக்குழு முடிவு
உள்ளூராட்சித்
தேர்தல் தினத்தன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும்
உதவி பெற்றுக்
கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்
மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர்
பூஜித ஜெயசுந்தரவுடன்,
தேர்தல் ஆணைக்குழு
நேற்று நடத்திய
பேச்சுக்களின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு
நிலையங்களில் இருந்த 400 மீற்றருக்கு அப்பால் முப்படைகளையும்
ரோந்து நடவடிக்கைகளில்
ஈடுபடுத்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
வாக்களிப்பு
நிலையங்களுக்குள் கைபேசிகள் பயன்படுத்துவது, மற்றும் வாக்குச்சீட்டுகளை
படம்பிடிப்பது சட்டவிரோதமானது.
அவ்வாறான
செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.