ரஹ்மத் மன்சூரின் வாகனம்
இனம்தெரியாத நபர்களினால் தீ வைப்பு!
முன்னாள்
அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின்
மகன் ரஹ்மத் மன்சூரின் வாகனம்
இனந்தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டு முற்றாக
எரிந்து
சாம்பராகியுள்ளது.
இன்று
அதிகாலை 2.30 மணியளவில் இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது..
தீயனைப்புப்
படையினர் ஸ்தலத்திற்கு விரைந்து வந்து தீயை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முழு முயற்சி எடுத்தபோதிலும் அது முடியாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை
பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஹ்மத் மன்சூர் கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.