பிறந்து குழந்தையை குப்பையில் வீசிய தந்தை

சிசிடிவி கேமராவால் சிக்கினார்


பிறந்து சிறிது நேரமே ஆன குழந்தையை, தந்தை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் சான்வெய் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது
குப்பைத் தொட்டியி பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தை ஒன்று குப்பைத் தொட்டியில் கிடப்பதை அந்த வழியாக சென்ற ஒருவர் பார்த்துள்ளார். அதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.
 இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டு சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில் ஒரு வாலிபர் அந்த குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசி சென்றது பதிவாகி இருந்தது. அந்த பதிவைக் கொண்டு ஒரு நபரை கைது செய்து பொலிஸார் விசாரித்தனர். விசாரணையில் அது தன்னுடைய குழந்தை என்றும் குழந்தை பிறந்தவுடன் ஊதா நிறத்தில் மாறியதால் குழந்தைக்கு கொடிய நோய் இருப்பதாக கருதி குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றதாகவும் கைது செய்யப்பட்ட நபர் கூறியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,

குளிரான சமயத்தில் குழந்தை பிறந்ததால், நிற மாற்றம் ஏற்பட்டதாகவும், மற்றபடி குழந்தை அரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்தனர். அந்த குழந்தை பின்னர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோர்களை கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சரியான நேரத்தில் குழந்தையை காப்பாற்றிய பெண்மணியை பலர் பாராட்டி வருகின்றனர்

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top