கிழக்கு மாகாணத்தில்
எதிர்வரும்
25ஆம் திகதி
724 பட்டதாரிகளுக்கு ஆசிரிய
நியமனம்
கிழக்கு
மாகாணத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி
724 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்க இருப்பதாக கிழக்கு மாகாண சபை கல்வி
அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் வெ.தவராஜா தெரிவித்துள்ளார்.
இந்த ஆசிரிய நியமனங்களை வழங்குவதை விரைவுபடுத்துமாறு
ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கல்வி அமைச்சை அறிவுறுத்தியுள்ளார்.
இந்நியமனங்கள்
தற்பொழுது கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற தமிழ், சிங்கள மொழி மூலமான ஆசிரிய வெற்றிடங்களைப் பொறுத்தே இந் நியமனம்
வழங்கப்பட இருக்கிறது.
இதன்
அடிப்படையில் சிங்கள மொழி மூலமான ஆசிரியர்கள் 617 பேரும், தமிழ்மொழி மூலமான ஆசிரியர்கள் 107 பேரும் நியமிக்கப்படவுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.