காணிகள் வழங்கப்பட்டு, சுற்றாடல் பாதிப்பு இல்லை
அறிக்கை அளிக்கப்பட்டால் மாத்திரம்
கொண்டச்சியில் 25 ஏக்கரில் கைத்தொழில் வலயம்
அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவிப்பு



மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொண்டச்சியில் 25 ஏக்கர் பரப்பளவில் கைத்தொழில் வலயம் அமைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் மஹிந்த அமரவீரவும், மஹிந்தானந்த அளுத்கமகேயும், வில்பத்து அருகே 75 ஏக்கரில் கைத்தொழில் வலயம் அமைக்கப்படுவதாக நாளிதழ்களில் வெளியாகிய செய்தி உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் றிசாட் பதியுதீன்,

இந்தத் திட்டத்துக்கு கொண்டச்சியில் 25 ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளது.  இதற்காக காடுகள் அழிக்கப்படவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கான நிலம் கோரப்பட்டுள்ளது.

காணிகள் வழங்கப்பட்டு, சுற்றாடல் பாதிப்பு இல்லை என்ற அறிக்கை அளிக்கப்பட்டால் மாத்திரம், இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top