வங்காளதேசத்தில் அவாமி லீக் தலைவர்
சுட்டுக் கொல்லப்பட்டார்
வங்காள
தேசத்தின் அவாமி
லீக் கட்சியின்
முக்கிய தலைவர்களுள்
ஒருவரான சுரேஷ்
கந்தி டான்சங்கியா
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வங்காள
தேசத்தின் ஆளுங்கட்சியான
அவாமி லீக்
கட்சியின் பிளச்சல்லா
பகுதியின் தலைவர்
சுரேஷ் கந்தி
டான்சங்கியா இன்று காலை குடும்பத்தினருடன் படகில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது
திடீரென படகை
மறித்த பயங்கரவாதிகள், சுரேஷின்
மீது சரமாரியாக
துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் சுரேஷ்
பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல்
அறிந்து சம்பவ
இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தைக் கைப்பற்றி,
பிரேத பரிசோதனைக்கு
அனுப்பிவைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.