வந்தாறுமூலை கோர விபத்தில்
உயிரிழந்தவர்களின் விபரங்கள்
வெளியாகின!
மட்டக்களப்பு
வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிள்கள் மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி
விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் தீயில் கருகி ஒருவர் உட்பட மூவர்
உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்,
உயிரிழந்தவர்களின் விபரங்கள் தற்போது
வெளியாகியுள்ளன.
இந்த
விபத்தில் வேப்பவுஸ் வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், வேப்பவுஸ்
3ம் குறுக்கு வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச்
சேர்ந்த 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன்
ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
எனினும்,
தீப்பற்றி எரிந்தவர் அடையாளம் காணப்படவில்லை என
பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
வாழைச்சேனை
பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி இரவு 7.30 மணிக்கு 4 பேர் இரண்டு
மோட்டார் சைக்கிள்கள் சமாந்தரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது இரு மோட்டர்
சைக்கிள்களும் விபத்துக்குள்ளாளன நிலையில் பின் பகுதியல் வந்த மோட்டர் சைக்கிளில்
வந்த இருவரும் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகினர்.
இந்த
நிலையில் இரு மோட்டர்சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் அதில் ஒருவர் தீக்கிரையானதுடன்,
ஏனைய இருவரும் சம்பவ இடத்தில்
உயிரிழந்துள்ளனர்.
அத்துடன்
மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விபத்து
பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்களும்
ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம்
குறித்த விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.