யாழ்ப்பாணம் செல்லும்போது திடீர் மாரடைப்பால்
மரணமடைந்த பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்



எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினரும், பேராதனை பல்கலைக் கழகத்தின் புவியல் விஞ்ஞானத் துறை பேராசிரியருமான எஸ்.எச். ஹஸ்புல்லாஹ் (67) காலாமானார்.
அவர் இன்று (25) யாழ். பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தபோது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமானார்.
1950 ஆம் ஆண்டு செப்டெம்பர் 03 ஆம் திகதி மன்னார், எருக்கலம்பிட்டியில் பிறந்த அவர்,  ஒரு ஆண் மற்றும் இரு பெண்குழந்தைகளின் தந்தையாவார்.
சாஹுல் ஹமீத் ஹஸ்புல்லாஹ், சமூக ரீதியான செயற்பாடுகள், இன நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் அதிக அக்கறையுள்ள சமூக ஆர்வலராவார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பட்டம் பெற்ற அவர், கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியாக பல்கலைக்கழகத்தில் முதுமாணி மற்றும் கலாநிதி (MA, Ph.D.) பட்டங்களையும் பெற்றார்.
முசலி தெற்கு மீள்குடியேற்றம் மற்றும் வில்பத்து சர்ச்சை தொடர்பிலான "Denying the Right to Return" (மீள்குடியேறுவதற்கான உரிமை மறுப்பு) எனும் நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  
அன்னாரின் ஜனாஸா, இன்று (25) இரவு 8.00 மணியளவில் மன்னார், எருக்கலம்பிட்டி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top